Tamil News
Home செய்திகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி கைதிகளை விடுவிக்க மைத்திரி இணக்கம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி கைதிகளை விடுவிக்க மைத்திரி இணக்கம்

அவசரகாலச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல் கைது செய்யப்பட்டிருக்கும் அல்லது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொது மக்களை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்

இவர்களின் வேண்டுகோளை தாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாகவும், இதுபற்றி மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்திலும் தாம் கூறியிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிலமை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினார்.

இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் M.H.A.ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான அலிசாகிர் மௌலானா, அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா, பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.பௌஸி. தௌபீக் M.I.M.மன்சூர் போன்றோர் கலந்து கொண்டனர்

Exit mobile version