கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட,ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் டைனமெய்ன்ட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய யுணைதீன் ரபாய்தீன் என்பவரை இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
ஏழுபுளிடியாளியில் வசித்து வந்த இவர் தனது மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத்துக்கு சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
கூறியபடியே இன்று காலை ஆறு முப்பது மணிக்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமட் பொருளைக் கட்டிக் கொண்டு வெடித்து உயிர் இழந்து உள்ளார். இறந்தவரின் சடலம் ஏழு புளியடி மேல் குடியேற்ற கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.