ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சௌர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் எதிர்வரும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஜேர்மனியின் தொழில்நுட்ப உதவி மற்றும் முதலீட்டை எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் மேலதிக உதவிகளை கோரியுள்ளார்.