Tamil News
Home செய்திகள் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார அதிகாரி

ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார அதிகாரி

கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் வழங்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது என்ற முடிவில் எந்த சூழ்நிலையிலும் இதுவரை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றங்கள் இருந்தால் அது குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version