ஜனாதிபதி தேர்தலில் கருவை ஆதரிக்கும் அமெரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியா பங்குபற்றினால், அவருக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை அதிகாரி சபாநாயகரை நாடாளுமன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் இவரின் மருமகனான நவீன் திஸநாயக்கவை அமெரிக்க உயர் ஸ்தானிகர் சந்தித்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவரின் சர்வதேச ஆலோசகரான பிரசாத் காரியவசம் என்பவர் அமெரிக்க சார்பானவர்.

இவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமானவர். அத்துடன் அரசியலுக்கு வர முன்னர் இவர் இராணுவத்தில் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.