Tamil News
Home செய்திகள் ஜனவரியில் கோட்டாபய சீனாவுக்குப் பயணம்

ஜனவரியில் கோட்டாபய சீனாவுக்குப் பயணம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனவரி மாதம் சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், அடுத்த ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

Exit mobile version