Tamil News
Home உலகச் செய்திகள் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் – ஆராய்கிறது நாசாவின் புதிய ரோவர் ரோபாட்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் – ஆராய்கிறது நாசாவின் புதிய ரோவர் ரோபாட்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய, 2ம் முறையாக நாசா, புதிய ரோவர் ரோபாட் களமிறக்கியுள்ளது.

செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதையடுத்து பெர்சவரன்ஸ் ரோவர்  நேற்று  இரவு 20.55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது.

ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version