அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவைக் களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு நேற்று தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலையும், அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்த்தன உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர்.