இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும், சிறிதரனும் போட்டியிடப்போவதாக நான் அறிந்தேன். அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து யாராவது போட்டியிட வேண்டுமென நான் ஏனையவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். அப்போது அவர்கள் என்னைப் போட்டியிடுமாறு வலியுறுத்தினார்கள். அதன்படியே நான் இந்தத் தலைவர் தெரிவுக்குப் போட்டியிடுகின்றேன்” என்றார்.