Tamil News
Home செய்திகள் சுதந்திர தினத்தை கரிநாளாகவே கடைப்பிடிப்போம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவிப்பு

சுதந்திர தினத்தை கரிநாளாகவே கடைப்பிடிப்போம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவிப்பு

எமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திரதினத்தை துக்கதினமாகவே  கடைப்பிடிப்போம்” என  வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இலங்கையின் சுதந்திர தினநாளன்று, அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்

மேலும் அவர்கள் கூறுகையில்,“எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம். அன்றைய தினம் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டங்கள், திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில் நான்காம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த போராட்டத்திற்கு பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகின்ற அனைவரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு, நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

Exit mobile version