Tamil News
Home செய்திகள் சுகாதார விதிமுறைகளை மீறி தேர் நடத்தினார்கள் – கோவில் தலைவர், செயலாளர் கைது

சுகாதார விதிமுறைகளை மீறி தேர் நடத்தினார்கள் – கோவில் தலைவர், செயலாளர் கைது

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்திர பெருந்திருவிழா இடம்பெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.

நாட்டில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய 50 பக்தர்களுக்கு மட்டுமே ஆலயத்தில் ஒரே நேரத்தில் வழிபட அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version