சீன செயலிகளுக்கு மீண்டும் தடை விதித்த இந்தியா

இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிப்பதாக கூறி 43 கைபேசி செயலிகளுக்கு (mobile apps)  இந்திய அரசு தடை விதித்துள்ளது.

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், கடந்த ஜூன் மாதம் 29-ம் திகதி, ‘டிக்டாக்’ உட்பட, 59 சீன செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது.

இதையடுத்து  பயனாளர் விபரங்களை சேகரிப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால், செப்டம்பர் மாதம் 2-ம் திகதி மேலும் 118 செயலிகளை  தடை செய்தது.

தற்போது ‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக’ கூறி 43 கைபேசி செயலிகளுக்கு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், இந்த தடை குறித்து இந்திய அரசு வெளியிட்ட தகவலில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் (users) இந்த செயலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.