Tamil News
Home உலகச் செய்திகள் சீனா வூகன் மாநிலம் மீதான தடை அகற்றம்

சீனா வூகன் மாநிலம் மீதான தடை அகற்றம்

கொரோனா வைரசின் தாக்கத்தை தொடர்ந்து சீனாசின் வூகன் மாநிலம் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் இன்று (07) முதல் விலக்கப்பட்டு மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 எனப்படும் வைரஸ் இந்த மாநிலத்தில் தான் ஆரம்பமாகியிருந்தது. எனினும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் சீனா தற்போது அங்கு நோயை கட்டுப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்த மாநிலத்தின் மீது போடப்பட்ட தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொடர்பான இறப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

Exit mobile version