சீனாவின் மனித உரிமை மீறல்கள் எல்லை மீறுகிறது. ஐ.நா. விற்கு 300 அமைப்புகள் வலியுறுத்து

சீனாவின் மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு காண சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என 300 இற்கும் மேற்பட்ட சர்வதேச சிவில் சமூக அமைப்புகள் ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளன.

உலக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு,  சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு, மனித உரிமைக்கான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட 300இற்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா. சபைக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளன.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொங்கொங், திபெத் போன்ற நாடுகளிலும், உள்நாட்டிலும் சீனா மனித உரிமைகளை மீறி வருகின்றது. இதற்குத் தீர்வு காணும் வகையில் சீனாவைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்.

கொங்கொங் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், உய்குர் முஸ்லிம் மீது அடக்குமுறையை கையாள்கிறது. மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் தடுப்பு மையங்களை அமைத்து உய்குர் மக்களை சித்திரவதை செய்கிறது. மனித உரிமை பாதுகாவலர்களை சித்திரவதை செய்தல், சிறைக்கு அனுப்புதல், கட்டாயப்படுத்தி காணாமல் போகச் செய்தல் மற்றும் வழக்கறிஞர்களிடம் இருந்து உரிமைகளை பறித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டு வருகின்றது.

ஐ.நா. இனிமேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளக் கூடாது. ஐ.நா. பொதுச் செயலாளர், ஐ.நா. மனித உரிமை ஆணையர் உள்ளிட்டோர் சீனாவின் உரிமை மீறல்களுக்கு பகிரங்கமாக தீர்வு காணும் பொறுப்பை ஏற்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.