Tamil News
Home செய்திகள் சிறைச்சாலை மோதல்களை கட்டுப்படுத்துவதற்காக சிறப்புப் படையணி – 500 பேர் இணைப்பு

சிறைச்சாலை மோதல்களை கட்டுப்படுத்துவதற்காக சிறப்புப் படையணி – 500 பேர் இணைப்பு

சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் இலங்கை இராணுவத்தில் 12 வருட கால சேவையை நிறைவு செய்து ஓய்வுபெற்ற 500 பேரை இந்த பிரிவில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபர நிலைமையின் போது சிறைக் காவலர்களால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அனர்த்த நிலையிலேயே அவ்வப்போது, சிறைகளில் ஏற்படும் மோதல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இத்தகைய விசேட படையணி ஒன்றின் தேவை உணரப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் இந்த சிறப்பு படைப் பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அரச உயர் மட்டத் தகவல்கள் தெரிவித்தன.

Exit mobile version