Tamil News
Home செய்திகள் சிறைகளில் பரவும் கொரோனா – விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை

சிறைகளில் பரவும் கொரோனா – விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கொவிட்-19 நோய்த் தொற்றுப் பரவுவதால், விளக்கமறியல் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களைச் சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளார்.

நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய விளக்கமறியல் மற்றும் விசாரணைகளை நிறைவு செய்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை சட்ட மா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளார்.

இந்தத் தகவலை சட்டமா அதிபரின் இணைப்பாளர் வெளியிட்டுள்ளார். வெலிக்கடை மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலைகளில் 107 கைதிகளுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version