Tamil News
Home செய்திகள் சிறுபான்மை சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க தூதுவர் வலியுறுத்து

சிறுபான்மை சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க தூதுவர் வலியுறுத்து

இலங்கையில் மனித உரிமைகள் நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன. ஆட்சி முறையின் ஜனநாயகப் பண்புகளை நிலை நாட்டி, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் அலைனா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிப் பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல் போன்ற வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவேண்டியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இலங்கையின் மனிதஉரிமைகள் பற்றிய ஏனைய கவலைகள் எழுந்துள்ளன. ஆட்சிமுறையின் ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தெற்காசியாவின் மிகப் பழைய ஜனநாயக தேசத்தின் ஜனநாயக நண்பன் என்ற வகையில் அமெரிக்கா இலங்கையிடத்தில் இந்த விடயங்களை எதிர் பார்க்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version