சிறீலங்கா விவகாரம் 2 மில்லியன் டொலர்கள் தேவை – ஐ.நா

சிறீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவியாக புதிய அதிகாரிகளை நியமிப்பது மற்றும் சாட்சியங்களை சேரித்து பாதுகாப்பது தொடர்பாக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான நிதியை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கு திட்டமிடப்படவில்லை, எனினும் அதற்கான விண்ணப்பத்தை ஐ.நாவின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம் என மனித உரிமை ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போதைய தீர்மானம் சிறீலங்காவுக்கு உடனடியாக பாதிப்புக்களை ஏற்படுத்தாதுவிட்டாலும், காலப்போக்கில் அது சிறீலங்காவை கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ள உறுப்பு மற்றும் உறுப்புரிமை அற்ற 40 நாடுகளுடனான உறவுகள் சிறீலங்காவுக்கு எதிர்காலத்தில் ஆபத்தாக மாற்றம் பெறலாம் என ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.