சிறீலங்கா உள்ளிட்ட அயல் நாடுகளில் ஆட்சி அமைக்க பா.ஜ.க திட்டம்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை  அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு சிறீலங்காவிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறீலங்காவிலும் நேபாளத்திலும் எங்களது கட்சியை விஸ்தரிக்க வேண்டும். அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் எனவும் அமித்ஷா கூறியதாக  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதலமைச்சருக்கு  ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி, அமித்ஷாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் எனவும் குறிப்பிட்டுள்ளது.