Tamil News
Home செய்திகள் சிறீலங்கா இராணுவம் யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் சோதனை

சிறீலங்கா இராணுவம் யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் சோதனை

யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெற இருப்பதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைவாகவே இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது.

குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கீழ் நாநூற்று ஐம்பது இராணுவத்தினர் மற்றும் தொண்ணூறு காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது. இச் சோதனை நடவடிக்கைகளை செய்தி அறிக்கையிட சென்ற கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version