Tamil News
Home செய்திகள் சிறீலங்கா அரசின் வரி அறிவீட்டில் பெரும் வீழ்ச்சி

சிறீலங்கா அரசின் வரி அறிவீட்டில் பெரும் வீழ்ச்சி

தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக சிறீலங்கா அரசின் வரி அறவீடு 120 பில்லியன் ரூபாய்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறீலங்கா அரசின் வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 வாரத்தில் சிறீலங்கா அரசு இந்த நிதியை இழந்தள்ளது. ஏற்றுமதி இறக்குமதி, குடிவரவு, வாகன போக்குவரத்து ஆகிய துறைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சிறீலங்கா அரசின் மின்சாரத்துறையின் ஒரு நாள் வருமானம் 450 மில்லியன் ரூபாய்களில் இருந்து 150 மில்லியன் ரூபாய்களாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Exit mobile version