Tamil News
Home செய்திகள் சிறீலங்காவில் 120 பேர் கோவிட்-19 நோயினால் பாதிப்பு

சிறீலங்காவில் 120 பேர் கோவிட்-19 நோயினால் பாதிப்பு

சிறீலங்காவில் இன்று (30) கோவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு இதுவரை மொத்தம் 120 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் இறந்துள்ளார். 11 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, ஆறு மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருக்கும் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச்சட்டம் மீண்டும் மாலை 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

Exit mobile version