Tamil News
Home செய்திகள் சிறீலங்காவில் விரைவாக பரவும் டெங்கு காச்சல்

சிறீலங்காவில் விரைவாக பரவும் டெங்கு காச்சல்

கடந்த ஐந்து மாதங்களில் சிறீலங்காவில் 19,825 பேர் டெங்கு காச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 22 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராட்சி நேற்று முன்தினம் (29) தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை விட டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 2019 ஆம் ஆண்டு டெங்கு நோயினால் 105,049 பேர் பாதிக்கப்பட்டதுடன், 150 பேர் மரணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version