Tamil News
Home செய்திகள் சிறீலங்காவில் ஏப்பிரலில் பொதுத்தேர்தல்

சிறீலங்காவில் ஏப்பிரலில் பொதுத்தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் நாள் சிறீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும், ஏப்பிரல் மாதம் மூன்றாவது வாரம் அங்கு பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் சிறீலங்கா அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிகப்பெரும் பிளவைச் சந்தித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இந்த தேர்தலில் மிகப்பெரும் பின்னடைவைச் சந்திக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம், சிறீலங்கா சுதந்திரக் கட்சி தாமரை மொட்டுச் சின்னததில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, தமிழ் கட்சிகள் சிறிய கூட்டணிகளாக போட்டியிடும் சாத்தியங்களே தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version