Tamil News
Home செய்திகள் சிறீலங்காவில் இயங்கும் சீனா நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை

சிறீலங்காவில் இயங்கும் சீனா நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை

சீனாவில் உள்ள 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தனது தடையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள சீனாவின் நிறுவனங்களும் அடங்கும்.

தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் நிர்மாணிக்கும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்கள் ஊடாக பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு அந்த அரசின் அனுமதியை பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமான நிலையம் போன்றவற்றை நிர்மானித்த நிறுவனங்கள் மீதும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால் இது இரு நாடுகளின் இறைமை தொடர்பான விடயம் அதில் அமெரிக்கா தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது.

Exit mobile version