Tamil News
Home செய்திகள் சிறீலங்காவின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியக் குழு ஆய்வு

சிறீலங்காவின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியக் குழு ஆய்வு

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்புக் குழுவினர் சிறீலங்காவுக்கு தமது உதவிகளை வழங்கி வருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவத்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் இணைப்பாளர் கிலிஸ் டி கேர்ச்சோவ் தலைமையிலான குழு சிறீலங்காவில் 11 ஆம் நாளில் இருந்து 16 ஆம் நாள் வரை தங்கியுள்ளது.

இந்த குழுவினர் ஆயுத நடவடிக்கை, தீவிரவாதம், மதவாதம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் தமது ஆலோசனைகளை சிறீலங்காவுக்கு வழங்கி வருகின்றனர்.

சிறீலங்காவுடன் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம், நாடுகடத்துதல் மற்றும் தகவல்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

நால்வர் அடங்கிய இந்த குழுவினர் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மரபனாவின் அழைப்பினைத் தொடர்ந்தே சிறீலங்கா வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version