Tamil News
Home செய்திகள் சிறீலங்காவின் சுற்றுலாத்துறையின் இழப்பு 2 பில்லியன் டொலர்கள்

சிறீலங்காவின் சுற்றுலாத்துறையின் இழப்பு 2 பில்லியன் டொலர்கள்

பிரித்தானியாவின் பயணக்கட்டுப்பாட்டு தளர்வு சிறீலங்காவுக்கு மிகவும் சாதகமானது ஏனெனில் சிறீலங்காவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் பிரித்தானியா மக்களே இராண்டாவது இடத்தில் இருக்கின்றனர் என எக்ஸ்பீரியன்ஸ் ரவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சாம் கிளார்க் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் மொத்த வருமானத்தில் சுற்றுலாத்துறை 11 விகிதம் என்பதுடன் மொத்த மக்கள் தொகையில் 6 விகிதமான மக்கள் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வேலைவாய்ப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்கா அரசு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சுற்றுலாத்துறை வருமானத்;தை ஏற்கனவே இழந்துள்ளது.

எதிர்வரும் மாதங்களே அதிக சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்யும் காலப்பகுதியாகும், எனவே பிரித்தானியாவின் இந்த பயணக்கட்டுப்பாட்டு தளர்வுகளைத் தொடர்ந்து தமது பயணங்களை ஏற்கனவே நிறுத்தியவர்கள் அதனை மீள் பரிசீலனை செய்யும் வாய்ப்புக்கள் உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “லவ் சிறீலங்கா” என்ற பரப்புரை ஒன்றை சிறீலங்கா அரசு அதன் சுற்றுலாத்துறைப் பணியாளர்கள் மூலம் சமூகவலைத் தளங்களினூடாக மேற்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிறீலங்காவில் தற்போதும் அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும்,அங்கு சிறுபான்மை இன மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவசரகாலச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தமிழ் சமூக ஆவலர் ஒருவர் எனவே சிறீலங்கா பாதுகாப்பு அற்ற தேசம் என்ற பரப்புரையில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும் என கருத்துக் கூறியுள்ளார்.

Exit mobile version