Tamil News
Home செய்திகள் சிறீதரன் சகல தரப்பினரையும் இணைத்து செயல்பட வேண்டும்; புளொட் அமைப்பின் தலைவா் சித்தார்த்தன் வாழ்த்து

சிறீதரன் சகல தரப்பினரையும் இணைத்து செயல்பட வேண்டும்; புளொட் அமைப்பின் தலைவா் சித்தார்த்தன் வாழ்த்து

கட்சிகளுக்குள்ளே காணப்படும் பிளவு ஒன்றுமையை கொண்டுவராது. எனவே புதிய தலைவர் யதார்த்தமான முறையில் செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயல் பட வேண்டும் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தமிழரசு கட்சி நீண்டகால பாரம்பரியம் கொண்ட, தமிழ்த் தேசியத்தின் ஆணிவேராக இருந்த கட்சியாகும். இதுவரையிலும், அந்த கட்சியின் தலைவராக பலர் செயல்பட்டுள்ளனர். தமிழரசு கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் ஒன்றின் மூலம் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவி தேர்தலுக்கான பிரசாரத்தின்போது மன முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தமிழ் தேசிய உணர்வுகளுக்கு சிறந்த ஒன்றாக தெரியவில்லை. தமிழரசு கட்சி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். கட்சிகளுக்குள்ளே காணப்படும் பிளவு ஒன்றுமையைக் கொண்டுவராது. எனவே புதிய தலைவர் யதார்த்தமான முறையில் செயற்பட வேண்டும். அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version