இந்நிலையில் பிபிசி ஆங்கில செய்திச்சேவை தலாய்லாமாவுடன் நடத்திய நேர்காணல் ஒன்றின் போது வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்து தொடர்பிலும் வினவியது. அதற்குப் பதிலளித்த திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவரான அவர், முஸ்லிம்கள் குறித்த தேரரின் கருத்தை நிபந்தனைகளின்றி கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

‘இன, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்ற ஒருவர் இத்தகைய கருத்துக்களைக் கூறுவதென்பது முற்றிலும் தவறானதாகும். நாம் ஏனைய பிற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சமய நம்பிக்கைக்கும், கௌரவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் தலாய்லாமா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் ‘நான் ஒரு பௌத்தன். என்னுடைய முழு நம்பிக்கையும் பௌத்த சமயத்தின் மீதே இருக்கின்றது. இருப்பினும் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களுக்கும் ஒரேவிதமாக நான் மதிப்பளிக்கிறேன்’ என மேலும் தெரிவித்துள்ளார்.