Tamil News
Home செய்திகள் சிறிலங்கா பிரதமரின் யாழ். விஜயம்

சிறிலங்கா பிரதமரின் யாழ். விஜயம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சமுர்த்தி வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் யாழ்.மாநகரசபை வளாகம் மற்றும் மணியந்தோட்டப் பகுதி உட்பட யாழ். மாநகரசபை பகுதிகளில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளின் குடும்பங்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, பிரதமரின் வருகையை அடுத்து, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Exit mobile version