சிறிலங்கா பாதுகாப்பு: ஆராய வருகிறார் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்

சிறிலங்கா மற்றும் மாலைதீவு நாடுகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆலோசனைகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ் வருகை தரவுள்ளார் என சிறிலங்காவிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 11 முதல் ஜுலை 16ஆம் திகதி வரை சிறிலங்கா,  மாலைதீவு ஆகிய இடங்களிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் இவர் தங்கியிருக்கும் போது, அரச உயர் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திப்பார். இவர் 2007இலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

ஐரோப்பிய சட்டம் தொடர்பாக லுவெய்ன் கத்தோலிக்க பல்கலைக்கழகம், பிறஸ்லெஸ் இலவச பல்கலைக்கழகம் மற்றும் பிறலஸ் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றார்.

ஐரோப்பிய சட்டங்கள், மனத உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பாக பல கட்டுரைகளை , புத்தகங்களையும் எழுதியுள்ளார்.