Tamil News
Home செய்திகள் சிறிலங்காவிற்கான இலவச விசா திட்டத்தில் சீனாவும், இந்தியாவும் இணைக்கப்பட்டன

சிறிலங்காவிற்கான இலவச விசா திட்டத்தில் சீனாவும், இந்தியாவும் இணைக்கப்பட்டன

இலங்கைக்கு வந்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் சேர்த்துக் கொண்டது.

இதுவரை தாய்லாந்து ஐரோப்பிய êனியன் நாடுகள் உட்பட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பின்னர் விமான நிலையத்தில் வைத்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தை செயற்படுத்தி வந்தது. ஆனால் ஈஸ்டர் தின குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமானளவு குறைந்திருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்தியாவும் சீனாவும் இணைத்துக் கொள்ளப்பட்டன.

Exit mobile version