சிறிலங்காநாடாளுமன்ற உறுப்பினர் மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணமானார்.

1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் மூலம் முதன்முதலில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவர், பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கங்களில் அமைச்சரவை அந்தஸ்துடைய, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். ஹிரியால தொகு தியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.