Tamil News
Home செய்திகள் சிங்கள மொழியில் மாத்திரமே சுதந்திர தினத்தில் தேசிய கீதம் – கமல் குணரத்ன தெரிவிப்பு

சிங்கள மொழியில் மாத்திரமே சுதந்திர தினத்தில் தேசிய கீதம் – கமல் குணரத்ன தெரிவிப்பு

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினநிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை காரணமாக, இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைத்துப் படையினரும் பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை அறிக்கைகள் ஒழுங்காக இருந்தால் மாத்திரமே படையினர் அணி வகுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version