சிங்களமயமாகும் முல்லைத்தீவு! கோ-ரூபகாந்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தம் இன்றிப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள மயமாக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. இவற்றைக் கேட்கவேண்டிய அதிகாரிகள் எட்டியும் பார்ப்பதில்லை. தடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறு 127 கிராம சேவகர்கள் பிரிவினையும், 115,024 மக்களையும் உள்ளடக்கிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது 2614 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இம் மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி நிலங்களைச் சிங்களம் விழுங்கி விட்டது.

இம் மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்து தமிழ்மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வளம் மிக்க பகுதிகளெனச் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் 1980ஆம் ஆண்டிற்கு முன்பு அபகரிக்கப்பட்டு 6 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு இம் மாவட்டத்தின் ஆறாவது பிரதேச செயலாளர் பிரிவாக நிர்வகிக்கப்படுகின்றது. ஆறாவதாக உருவாக்கப்பட்ட இந்தப் பிரதேச செயலகமானது முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் என பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் சுற்றுநிருபம் மட்டுமே உள்ளபோதும் இப் பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இயங்குமென எந்தவித வர்த்தமானி அறிவித்தலும் கிடையாது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட உத்தியோகப் பற்றற்ற சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவில் இன்று 9 ஆயிரத்து 560. சிங்கள மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் வாய்ப்புக்களுக்காகத் தமிழ்மக்களின் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு மூவாயிரம் ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு டொலர்பாம்,கென்பாம் என்ற மிகப்பெரும் இரு பண்ணைகள் உருவாக்கப்பட்டு இவர்களுக்கான தொழில் மையங்களும் அமைக்கப்பட்டன.land north சிங்களமயமாகும் முல்லைத்தீவு! கோ-ரூபகாந்

ஆனால் இன்று இப்பிரதேசங்கள் மிகவும் வளர்ச்சி கண்டு உட்கட்டுமான வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுப் பாடசாலைகள் முதல்,சந்தை வாய்ப்புக்கள் வரையும் முல்லைத்தீவு நகரத்தினையும் மிஞ்சி நிற்கின்றது.

இதன் பின்பு இறுதி யுத்த காலத்திலும் இதனை அண்டிய பகுதிகள் மற்றும் ஒதியமலையை அண்மித்த பகுதிகள் உள்ளடங்கலாக மேலும் 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ்மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் வனப்பகுதிகளாக இருந்த இம் மாவட்டத்தின் இதன் எல்லைப்புறங்களும் அளவு கணக்குத் தெரியாமாலேயே அபகரிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் டொலர்பாம், ,கென்பாம் எனவும் வெலிஓயா எனவும் ஒரு பெரும்பகுதியை ஏப்பம் விட்ட சிங்களப் பூதம் தற்போது கொக்குளாய் கொக்குத்தொடுவாயில் ஒருபகுதி நிலமும், இங்கே செல்லும்; வீதியோரமுள்ள காடுகளைப் பார்வைக்கு விட்டபின்பு சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் புற்றுநோய் உள்ளிருந்தே கொல்வதைப்போல் பாரிய குடியிருப்புக்களையும் அமைத்துள்ளனர்.

இதேபோன்று அம்பகாமம், இரணைமடு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகளையும், வயல்களையும் ஆக்கிரமித்துள்ள இராணுவம் குளங்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இரணைமடு அம்பகாமம் பகுதிகளில் மட்டும் நான்கு குளங்கள் இன்றுவரை படையினரின் முற்றுகைக்குள் உள்ளன. இவ்விடத்தில் மட்டும் 8 ஆயிரம் நிலம் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்பகுதியில் அம்பகாமம், புலிமச்சி நாதகுளம்,கூழாமுறிப்புப் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வகையிலேயே குறித்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதில் மக்களின் வாழ்வாதாரமான வயல் நிலம் பல ஆயிரம் ஏக்கர் உண்டு. இவ்வயல்களையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்த சுமார் 1500 குடும்பங்கள் இன்றுவரை அடுத்தவர் தயவை நம்பி வாழும் நிலையில் உள்ளனர்.

இவற்றினை விடவும் விசுவமடு,தர்மபுரம்,கேப்பாபுலவு, கோம்பாவில் வட்டுவாகல் உள்ளிட்ட இடங்களில் பாரிய பிரதேசங்களும் ஏனைய இடங்கள் பலவற்றில் சிறு சிறு துண்டுகளாகவென மொத்தம் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தைச் சிங்களப்படைகள் ஆக்கிரமித்து முழுமையாக சுருட்டிவைத்துள்ளனர். இவற்றிற்கு அப்பால். மகாவலி எல் வலயம் என இன்னொரு பகுதியும் பறிபோனவண்ணமே உள்ளது.DSC06001 சிங்களமயமாகும் முல்லைத்தீவு! கோ-ரூபகாந்

இவை அனைத்தையும் போன்று ஏ9 வீதியில் இரணைமடுச் சந்திக்கு அப்பால் முல்லைமாவட்டம் ஆரம்பிக்கும் பிரதேசத்தில் இருந்து கொக்காவில் பிரதேசமான சுமார் 7 கிலோமீற்றர் தொலைவு கொண்ட பகுதியில் வீதியின் முகப்பில் காடு அப்படியே காட்சியளிக்கப் புற்றுநோய் இங்கேயும் ஆக்கிரமித்து விட்டது நீளம் ஏழு கிலோமீற்றர் எனின் அகலம் எத்தனை கிலோமீற்றர் என்பதனை வரையறுத்துக்கூற முடியாதவாறு காடு முழுமையாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதுடன் முறிகண்டி, வசந்தநகர்ப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களும் படையினரால் விரட்டப்பட்டு அப்பகுதிகளும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இங்கு மொத்தம் 4000 ஏக்கர் நிலம் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் முறிகண்டிக்குளமும் இன்றுவரை படையினரின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்மக்கள் 2002ஆம் ஆண்டு சமாதான காலத்திலேயே புதிதாக வீடுகள் அமைத்து மீளக் குடியமர்ந்திருந்தார்கள்.

இவ்வாறு புதிதாக வீடுகளை அமைத்தவர்களில் சுமார் 150இற்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது படையினரின் பிடியில் உள்ளதால் இதன் உரிமையாளர்கள் சிதறுண்டுபோய் உள்ளனர். இவர்களுடைய பல காணிகளின் அனுமதிப்பத்திரங்கள் மட்டுமே உரிமையாளர்களின் கைவசம் உள்ளன. இதல் பல காணிகளைச் சுற்றி முட்கம்பிகள் அமைத்திருந்தாலும் சில இடங்களைச் சு10னியப்பிரதேசம் போலக் கைவிட்டுள்ள படையினர் அதன் உரிமையாளர்களை மட்டும் வாழ்விடம் அமைக்க அனுமதிக்கவில்லை.

இவ்வாறு ஏ9 வீதியில். முறிகண்டிக் காட்டினை அண்டிய பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை அபகரித்துள்ள படையினரின் பயன்பாட்டிற்கெனக் காட்டின் நடுவே நூற்றிற்கும் மேற்பட்ட முகாம்கள் சீனாவின் பொருத்து வீட்டுப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளதோடு பல தார் வீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் சகல விதமான வசதிவாய்ப்புக்களும் நடுக்காட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.Murikandy சிங்களமயமாகும் முல்லைத்தீவு! கோ-ரூபகாந்

குறித்த பகுதிகளுக்குள் ஒருபகுதி சிங்கள மக்களும் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் இங்கு சிங்களக் குடும்பங்களும் வந்து விட்டனவா? என்ற பெரும் அச்சம் எழுந்துள்ளது. இவ்வாறான அச்சம் பெரும் முன் எச்சரிக்கையாகவும் உள்ளது. நடுக்காட்டில் போதிய வசதி வாய்ப்பை உண்டுபண்ணியுள்ளோர் பிரதான வீதிகளில் இருந்து இறங்கும் வீதிகளை மட்டும் கிரவல் கொண்டே அமைத்துள்ளனர்.

இவ்வாறு செல்லும் குறுக்கு வீதியில் ஓரு குறுக்கு வீதியானது முறிகண்டிக் குளத்தின் ஊடாகச் செல்வதனால் அக்குளத்தின் நீர் சற்றேனும் தேங்கிவிடக் கூடாது என்பதற்காகவே குளக்கட்டினை நடுவில் உடைத்து வெள்ள நீரைத் தமிழர்கள் குடியிருப்புக்குள் செலுத்தியுள்ளது இராணுவம்.இவ்வாறாகச் சிங்களமயமாக்கப்பட்ட பகுதிகளுக்குள் தமிழர்கள் எட்டியும் பார்த்து விடக் கூடாது என்பதற்காகக் காட்டினைச் சுற்றி முட்கம்பிப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றிற்கு அப்பால் வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 613 ஏக்கரினைக் கடற்படையினரும் அதன் அருகில் சுமார் 180 ஏக்கர் நிலத்தை வான்படையினரும் அபகரித்ததைப்போல இம் மாவட்டத் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான கேப்பாபுலவு கிராமத்தில் 700 ஏக்கர் நிலம் இன்றுவரை படையினரின் அபகரிப்பில் உள்ளது. இங்கு வாழ்ந்த 313 குடும்பங்கள் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள மாதிரிக் கிராமத்தில் வாழ்கின்றனர்.

இவ்வாறு ஆண்டான்குளத்தில் 39 குடும்பங்களின் 94 ஏக்கரும்,திருக்கோணம்பட்டியில் 04 குடும்பங்களின் 26 ஏக்கர் நிலமும், விண்ணகம் வயல்வெளியில் 3 குடும்பங்களின் 18 ஏக்கரும், ஆத்தங்கடவைப் பிரதேசத்தில் 17 குடும்பங்களின் 124 ஏக்கர் நிலமும் படையினரிடம் உள்ளதோடு மருதடிக்குள வயல்வெளியில் 9 குடும்பங்களின் 48 ஏக்கர் நிலமும் ää ஆலங்குளத்தில் 14 குடும்பங்களின் 74 ஏக்கர் நிலமும் படையினரின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.

இதேபோன்று சாமிப்பில் கண்டலில் 26 குடும்பங்களின் 143 ஏக்கர் நிலமும், ஈரக்கொழுந்தன் வெளியில் 8 குடும்பங்களுக்;குச் சொந்தமான 71 ஏக்கரும் அபகரிக்கப்பட்டுள்ளதோடு படலைக்கல்லில் 7 குடும்பத்திற்கு உரித்தான 48 ஏக்கரும், குந்தைகைக்குளத்தில் 24 குடும்பங்களின் 48 ஏக்கரும், செம்மலை புளியமுனையில் 125 குடும்பங்களின் 276 ஏக்கர் நிலப்பரப்பும் படையினர்வசமேயுள்ளது.

இவற்றினைப் போன்றே நீராவியடியில் 36 குடும்பங்களுக்குச் சொந்தமான 163 ஏக்கரும், உலாத்து வெளியில் 15 ஏக்கருடன், நீராவி வயலில் 20 ஏக்கர் வயல்நிலமும்ää வட்டுவனில் 10 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.190212 Buddha statue Semmalai சிங்களமயமாகும் முல்லைத்தீவு! கோ-ரூபகாந்

அபிவிருத்தி,பேச்சுச் சுதந்திரம் நிர்வாகச் சுதந்திரம் என மாயை காட்டும் இந்த சொல்லலங்கார அரசில் நல்லாட்சி என்ற போர்வையில் ஒரு மாவட்டமே விலைபேசி விற்பனை செய்யப்பட்ட வண்ணமுள்ளது இதற்கும் அப்பால். ஓர் அரசியல் வாதியின் ஆசிர்வாதத்துடன் காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு மரங்கள் தென்னிலங்கைக்குக் கடத்தப்படுவதோடு இன்னொரு பகுதியினரின் ஆசிர்வாதத்துடன் தென்னிலங்கை மீனவர்களினால் இம் மாவட்டத்தின் கடற்கரையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படுகின்றது.

யுத்தகாலத்தில் யுத்தம் என்ற கண்ணுக்குத் தெரிந்த ஓர் எதிரியைத் துணிந்து எதிர்கொண்ட இம் மக்களுக்கு இன்று கண்ணுக்குத் தெரியாத சு10ழ்நிலையில் எதிரிகள் பல வழிகளிலும் அதாவது ஆக்கிரமிப்பு, கொள்ளை, அடாத்தென ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் இடம்பெறும் மறைமுக யுத்தத்தினை எதிர் கொண்டு தமது சீவனோபாயத்தை நடாத்த முடியாமல் தவிர்க்கின்றனர்.

அரசியல்வாதிகளாலும் ஒன்றுமே உருப்படியாகச் சாதிக்க முடியவில்லை. சர்வதேசமோ அல்லது இது தொடர்பில் அக்கறையுள்ள அமைப்புக்களோ எதனையும் சாதிக்கவும் முடியவில்லை. இதனால் இம் மக்கள் முள்ளிவாய்க்காலின் அவலத்தை இன்றும் அனுபவித்த வண்ணமே உள்ளனர்.

இந்தளவு நிலங்களையும் விழுங்கியுள்ள சிங்களம் தாம் வடக்கு மாகாணம் முழுவதுமே படையினரின் நித்திய பாவனைக்கான சிறுபகுதி நிலத்தினை மட்டுமே வைத்துள்ளதாக வழமையான பொய்யுரைப்பை தொடர்ந்த வண்ணமேயுள்ளனர்.