சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்: அரசின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறும் சிறீலங்காவின் தேசிய சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும். வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழிழ் இசைக்கப்படலாம்.

இவ்வாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.