Tamil News
Home செய்திகள் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்: முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எதிர்ப்பு

சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்: முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எதிர்ப்பு

இலங்கையின் 72ஆவது தேசிய தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தின தேசிய நிகழ்வில், சிங்கள மொழியிலான தேசிய கீதம் மாத்திரமே பாடப்படும் என்றும், இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கின்றபோதும் ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் உள்ளது, அதேபோன்று, இலங்கையிலும் ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம்பாடப்படும் என்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்திருந்தார்.

இந்த கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், இது குறித்து ஜனாதிபதிக்கு தாம் வலியுறுத்த விருக்கிறார் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version