சாதனையாளர் கௌரவிப்பு விழா

வவுனியா வடக்கு வலயப்பாடசாலைகளை சேர்ந்த அதிபர் ஆசிரியர்களிற்கான கௌரவிப்பு விழா நிகழ்வு நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் இன்று இடம்பெற்றது.

வலயகல்வி பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அஞ்சலிதேவி சாந்தசீலன் கலந்துகொண்டார்.

இதன்போது கடந்த 2018/2019 ஆம் ஆண்டுகளில் வடக்கு வலயத்திற்குட்பட்ட பல பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆரம்பகல்வி மாணவர்களின் கல்விசெயற்பாட்டில் சாதனைகளை நிலைநாட்டிய அதிபர் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கவைக்கபட்டது.02 சாதனையாளர் கௌரவிப்பு விழா

3 சாதனையாளர் கௌரவிப்பு விழா

4 சாதனையாளர் கௌரவிப்பு விழா

5 சாதனையாளர் கௌரவிப்பு விழா

6 சாதனையாளர் கௌரவிப்பு விழா

7 சாதனையாளர் கௌரவிப்பு விழா

8 சாதனையாளர் கௌரவிப்பு விழா

a சாதனையாளர் கௌரவிப்பு விழா

நிகழ்வில் ஆரம்பகல்வி பிரதிகல்வி பணிப்பாளர்அ.சற்குணராசா, இலங்கை திருச்சபை பாடசாலை அதிபர் இ.நவரட்ணம், நெடுங்கேணி மகாவித்தியாலய அதிபர் செ.பவேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.