Tamil News
Home செய்திகள் சவேந்திர மீதான தடையை வரவேற்பது தேசத் துரோகம்: விக்கி மீது தயாசிறி பாய்ச்சல்

சவேந்திர மீதான தடையை வரவேற்பது தேசத் துரோகம்: விக்கி மீது தயாசிறி பாய்ச்சல்

நிரூபிக்கப்படாத போர்க் குற்றச்சாட்டுகளைக் காரணங்காட்டி இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை வரவேற்கின்றார் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை தேசத்துரோகக் கருத்தாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஸ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version