சவீந்திர சில்வா மீது பயணத்தடை வேண்டும் – அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான நடவடிக்கை அமைப்பு

சிறீலங்கா அரசு சில்வாவின் நியமனத்தை நிறுத்த வேண்டும் இல்லை எனில் சிறீலங்காவின் கூட்டணி நாடுகள் சில்வாவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடைகளை ஏற்படுத்த வேண்டும்.அவருக்கு நுளைவு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான நடவடிக்கை அமைப்பு இன்று (19) வெளியிட்டுள்ள அதன்அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா அவர்கள் லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத் தளபதியாக நியமனம் செய்தது என்பது சிறீலங்காவின் பெயரை அதிகளவில் களங்கப்படுத்தும் செயல். இது அவர்மீதுள்ள போர்க்குற்றச் சாட்டுக்கள்மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் நிலையை இல்லாது செய்துவிடும்.

கடந்த ஜனவரி மாதம் நாம் 137 பக்க ஆவணம் ஒன்றை அவருக்கு எதிராக வெளியிட்டிருந்தோம் அதில் அவர் செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளன. அதில் உள்ளசான்றுகள் அவரைத் தண்டிக்கப் போதுமானவை.

ஆனால் சிறீலங்கா அரசு அதனை மதிக்காது அவருக்கு பதவி உயர்வு வழங்கியிருந்தது.

2009 ஆம் ஆண்டுமனித உரிமைகளை மதிக்காது பல நூறு தமிழ் மக்களை இராணுவத்தாக்குதல் மூலம் சில்வா படுகொலை செய்திருந்ததாக அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமானநடவடிக்கை அமைப்பின் பணிப்பாளர்ஜஸ்மின் சூக்கா தெரிவித்திருந்தார்.

1980 களில் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஜே.வி.பி கலவரத்தின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் அன்றைய கஜபா படையணியின் தளபதியுமான கோத்தபாயா ராஜபக்சாவின் கீழ்பணியாற்றிய சவீந்திர சில்வா ஏராளமான சிங்கள இளைஞர்களை படுகொலை செய்திருந்தார்.

ஆனால் அவர் தண்டிக்கப்படவில்லை.ஆனால் இவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் சிறீலங்காவில் படுகொலைக் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கும் என ஜஸ்மின் மேலும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த நியமனம் சிறீலங்காஇராணுவத்திற்கும் அமெரிக்கபடையினருக்கும் இடையில் உள்ள பயிற்சி நடவடிக்கைகளை பாதிப்பதுடன் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் தகமையையும் சிறீலங்கா இழக்கும்.

சிறீலங்கா அரசு சில்வாவின் நியமனத்தை நிறுத்த வேண்டும் இல்லை எனில் சிறீலங்காவின் கூட்டணி நாடுகள் சில்வாவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடைகளை ஏற்படுத்த வேண்டும்.அவருக்கு நுளைவு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.