Tamil News
Home செய்திகள் சர்வதேச மனித உரிமைகள் தினம்- முல்லைத்தீவு,யாழில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினம்- முல்லைத்தீவு,யாழில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள்  நாளை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1373 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

இந்தநிலையில் இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்திருந்ததுடன், போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் உயர்ஸ்தானிகருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு குறித்த அலுவலகத்தினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version