சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது சிங்கள பௌத்தர்களுக்காக மட்டுமே

சம்பத் வங்கியுடன் நெருங்கிய வியாபாரத் தொடர்புகளை பேணி வரும் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான Nimal Perera தனது twitter கணக்கில் பின்வருமாறு பகிரங்கமாக பதிந்துளார்.

“சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது சிங்கள பௌத்தர்களுக்கு சேவை வழங்குவதற்கு மட்டுமே அது தான் உண்மை இப்படி சொல்வதால் என்னை ஒரு இனவாதியாக பார்க்க வேண்டாம் என பதிந்துளார்”106299520 1205469876463308 8277548598936190936 n சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது சிங்கள பௌத்தர்களுக்காக மட்டுமே

பிரபல தொழிலதிபர் Nimal Perera வின் பதிவுக்கு பதிலடியாக முன்னாள் நிதி அமைச்சர்மங்கள சமரவீர கீழ்வரும் பதிவினை தனது twitterகணக்கில் பதிந்துளார்.

சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சேவை வழங்க அல்ல என்பது தொடர்பில் என்னை அறிவூட்டியதற்கு Nimal Perera வுக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதுடன் சம்பத் வங்கியில் இருக்கும் எனது வங்கி கணக்கை ஜாதி மதம் குலம் பாராது நாட்டின் அனைத்து மக்கள் பிரிவுக்கு பொதுவான சேவை வழங்கும் வங்கியொன்றுக்கு மாற்றும் படி எனது காரியாலத்திற்கு நான் அறிவித் துள்ளேன் அதனால் சம்பத் வங்கிக்கு பாரிய நஷ்டம் ஏதும் ஏற்படப் போவதில்லை.

என்றாலும் மனித விழுமியங்களை பேணி வாழ்பவன் என்ற வகையில் எனக்கு இது மிக முக்கியமானதும் மேலானதுமாகும். இனவாதத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தைரியமாக முன்வைத்து செயல்படுத்தியும் காட்டியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் .