சடலங்களை பலவந்தமாக தகனம் செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் -ஐநா

கோவிட் தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்வதே இலங்கை அரசின் தீர்மானமாக இருப்பது மனித உரிமையை மீறும் செயல் ஐ.நா தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமை ஆணைக்குழவின் விசேட நிபுணக் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் கோவிட் தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்வதன் மூலம சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படுவதுடன் வன்முறைகள் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

“தகனம் செய்வது ஒரே தீர்மானமாக ஏற்றுக்கொள்வது மனித உரிமை மீறலாகும். கோவிட் தொற்று ஏற்பட்டு மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதனுாடாக வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையிலோ வேறு நாடுகளிலோ மருத்துவ ரீதியில்  எந்த ஆதாரமும் இல்லை.

அத்தோடு உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டி இருப்பது சடலங்களை தகனம் செய்வது தொற்று பரவலைத் தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாகும்.

எனவே கொரோனாவால் உயிரிழக்கும் சடலங்களை பலவந்தமாக தகனம் செய்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தகனங்களுக்காக எந்தமுறையிலாவது நிவாரண முறையொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என ஐநா வலியுறுத்தியுள்ளது.