சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் ஐ.தே.க வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக இணையத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட இரண்டு ஊடகவிலாளர்கள் மீது சிறீலங்கா காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுவருவது கண்டனத்துக்குரியது என சிறீலங்காவின் இணையத்தள ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சஜித்துக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்ட ஊடகவியலாளர்கள் துசாரா விதாரண மற்றும் தனுசகா சஞ்சாயா ஆகியோர் மீதே சிறீலங்கா காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.