சக்தி தொலைக்காட்சி சேவைக்கு தடை ! கல்முனை மாநகர முதல்வர் அதிரடி

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று ஐ.எஸ்  பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக  முஸ்லிம்களைப் புண்படுத்தும் விதமாக ஒருதலைப்பட்சமாக மேற்கொண்ட செய்தி ஒளிபரப்புகளையடுத்து, கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சி சேவையை தடை செய்யும்படி தொலைக்காட்சி நிறுவனங்களின் சேவையினருக்கு கல்முனை மாநகரசபை முதல்வர் உயர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்கள், மற்றும் முஸ்லிம் அமைப்பினர் மேற்கொண்ட  முறைப்பாடுகளை தொடர்ந்து  இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று, கல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் DAN தொலைக்காட்சி உட்பட்ட தொலைக்காட்சி சேவைகளை தடை செய்வதற்கு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.