Tamil News
Home செய்திகள் கோவையில் கைதான ஐ.எஸ் சந்தேக நபர்கள்

கோவையில் கைதான ஐ.எஸ் சந்தேக நபர்கள்

சிறிலங்காவில் இடம்பெற்ற 21 ஏப்ரல் தாக்குதல்தாரியுடன் சமூகவலைத்தள தொடர்பைக் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியா, கோவையில் சிலர் கைதாகியிருந்தனர். ஷஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தேசிய புலனாய்வாளர்களினால் கோவை உக்கடம் பகுதியில் 7இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள், உட்பட பல மின்சாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கோவை மாநகர நுண்ணறிவு காவல்துறையினர் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவல்களையடுத்தே இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 13ஆம் திகதி கோவை தெற்கு உக்கடம் அன்புநகரைச் சேர்ந்த ஷாஜகான் (25), கோவை வின்சென்ட் சாலையிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன் (25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்த ஷேக் சபியுல்ல (36) ஆகியோரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் வீடுகளில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மூவரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வந்தனர்.  நேற்று காலை 8 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version