Tamil News
Home உலகச் செய்திகள் கோவிட் -19 – ஜேர்மனின் மாநில நிதி அமைச்சர் தற்கொலை

கோவிட் -19 – ஜேர்மனின் மாநில நிதி அமைச்சர் தற்கொலை

கொரோனா வைரசினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பின் எதிர்விளைவுகளால் அதிர்ச்சியடைந்த ஜேர்மனின் கெஸ் மாநில நிதி அமைச்சர் தேமஸ் ஸ்காபேர் (54) இன்று (29) தற்கொலை செய்துள்ளார்.

புகையிரத பாதை அருகில் இன்று அவர் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும்இ இது தற்கொலையாக தாம் கருதுவதாகவும் ஜேர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனின் மிக முக்கிய வங்கிகளான டெற்சு வங்கிஇ ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கி மற்றும் கொமெர்ஸ் வங்கி போன்றவற்றின் தலைமையகமகத் திகழும் பிராங்போட் நகரின் நிதி அமைச்சராகவே அவர் பணியாற்றி வந்துள்ளார்.

Exit mobile version