கோவிட்-19 – இத்தாலியில் சிறீலங்கா நபர் மரணம்

கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இத்தாலி மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சிறீலங்கா நபர் ஒருவர் இறந்துள்ளதாக இத்தாலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

70 வயதான இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவில் நேற்று (24) வரை 102 பேர் இந்த நோயால் பாதிக்கபபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பகா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.