கோத்தபாயவின் கருத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.! வீடியோ இணைப்பு

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென தெரிவித்தார்.

 

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
01 3 கோத்தபாயவின் கருத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.! வீடியோ இணைப்பு

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1032 நாட்களாக போராடிவரும் உறவினர்களாலே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது இது ஒரு பெளத்த சிங்கள நாடு என்ற கோசம் தான் இன்று இலங்கையில் மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிறது. எனவே கைது செய்து தண்டிக்கப்பட வேண்டியவர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா அல்ல. இனங்களுக்கிடையே உள்ள சகஜ வாழ்வைச் சிதைத்து, நல்லிணக்கத்தை குழப்பி, நாட்டுக்குள் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை நடத்தி முடிக்க அழைப்பு விடும் வியத்மக, எலிய, சிங்கள லே போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களையே கைது செய்ய வேண்டும்.
002 கோத்தபாயவின் கருத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.! வீடியோ இணைப்பு
மேலும் இவ்வாறான சம்பவங்கள் எமக்கு புலப்படுத்தும் உண்மைகள் என்னவென்றால், நாங்கள் ஒற்றையாட்சிக்குள் இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு தீர்வையும் தரும் என்பதேயாகும் என்ற பதாகையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

001 கோத்தபாயவின் கருத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.! வீடியோ இணைப்பு

003 1 கோத்தபாயவின் கருத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.! வீடியோ இணைப்பு