முன்னாள் பாதுகாப்புச் செயலரும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபயா ராஜபக்ஸவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கல்வியங்காட்டிலுள்ள காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இன்று(22) காலையில் இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.